Skip to main content

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு

தலைவர் சொன்னதும் - முடிவு தெரிந்ததும்!.........................
“பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பின் கல்லூரிகளில் சேர தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுமாம்.
ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும் ஒரு தலைமுறை தப்பித் தவறிப் படித்துத் தலையெடுக்கத் தலைப்பட்டது என்றவுடன், அதற்கு மரண அடி கொடுத்துத் தரைக்குள் புதைக்க ஆரியம் சூழ்ச்சித் திட்டத்தை வகுத்துள்ளது!'' (‘விடுதலை’, 4.8.2016).
‘‘மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெறுதல் வேண்டும். அய்.அய்.டி.,களில் சேருவதற்கு 12 ஆம் வகுப்பு மதிப் பெண்ணைக் கணக்கில் எடுக்காமல், தனியே நுழைவுத் தேர்வு எழுதிட வைப்பது நமது ஒடுக்கப்பட்ட மற்றும் கிராமங்களிலிருந்து வந்து சேர விரும்பும் பிள்ளைகளை அனுமதிக்காது தடுக்கும் சூழ்ச்சியையும் தமிழக முதல்வரும், எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து முறியடிக்க முன்வருதலும் அவசர அவசியமாகும்'' (‘விடுதலை’, 10.8.2016).
திராவிடர் கழகத் தலைவர் சில நாள்களுக்கு முன் தெரிவித்த கருத்துகள் இவை.
இதோ, இப்பொழுது வெளிவந்த தகவல் என்ன தெரியுமா?
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் முதல் இடத்திலும், அகில இந்தியாவில் 141 ஆவது இடத்திலும் தகுதி பெற்றுள்ள அக்ஷய் குமாரின் பின்னணி என்ன? அப்பா டாக்டர், அம்மா டாக்டர், மேலும் பையன் தொடக்க முதல் படித்தது சி.பி.எஸ்.இ. பள்ளியில்.
இதைத்தான் தமிழர் தலைவர் சொன்னார் - நீட் தேர்வு என்பது படித்த மேல் தட்டு மக்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தான் சாதகமானது என்று. அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது! சமூகநீதிக்கு எதிரானது ‘நீட்’ என்பதற்கு இன்னுமா ஆதாரம் தேவை?
கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்காம்?

Comments

Popular posts from this blog

சம்புகன் கதை என்ன ?

சம்புகனின் கதையை முழுமையாக அறியமுடியவில்லை . அதைச் சொல்லவமுடியுமா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார் . அந்தத் தேடலின் பதிவாக இதோ சம்புகனின் கதை  ஸ்ரீ வால்மீகி அருளிய இராமானணத்தில் உள்ளபடி . இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார். அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன். வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் . "ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் . ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் . எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர். மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில்...

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே!

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே! பெரியார் இறுதிவரை பார்ப்பனியத்தின் மீதும் இந்துமதத்தின் மீதுமட்டும் (பார்ப்பனர்கள் ,இந்துக்கள் மீத ல்ல .) ஏன் எதிர்த்தார் என்போரும் முழுவதும் படித்து தெளிவடையுங்கள் . ================ இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள். சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல். 1926க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) “மகாத்மா ” காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா? பகத்சிங் துhக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூட...

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம் இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும் உண்டு. “திராவிடந்தான் எல்லாம் தந்தது” என்ற மிகைப்படுத்தப்பட்டப் புரிதலும் உண்டு. எது சரி என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட்டு பெரியார், அண்ணா, பாவாணர் போன்றோர் திராவிட(ர்)/(ம்)-த்தை எப்பிடிக் கையாண்டனர்?அவையெல்லாம் ஒன்றா? என்பதைப் பற்றியே இப்பதிவு ! இவர்களில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் பெரியார்தான். பெரியாரின் திராவிடரும்  திராவிடத் தமிழ் நாடும்  : பெரியார்தான் முதன்முதலில் திராவிடர் எனக் குறித்தார் என்பது உண்மையா? இல்லவே இல்லை ! அயோத்திதாசர்  ‘ சாதியற்ற திரவிட மஹா ஜன சபை ‘ என்னும் அமைப்பைத் துவக்கியது 1891-ல். அப்போது பெரியார்க்கு வயது 12 ! அதே நேரத்தில் ஜான்ரத்தினம் என்பவர் ‘ திரவிடர் கழகம் ‘ என்ற அமைப்பையும்  திராவிட பாண்டியன்  என்னும் பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். அ...