Skip to main content

Posts

Showing posts from August, 2016

இஸ்ரோவின் “ஸ்கிரேம்ஜெட்" சோதனை வெற்றிக்கு பாராட்டு !

இஸ்ரோவின் “ஸ்கிரேம்ஜெட்" சோதனை வெற்றிக்கு பாராட்டு ! விண்வெளி விமானத்தில் ஸ்கிரேம்ஜெட் என்ஜினைப் பயன்படுத்தும் போது, இப்போது இந்தியா விலிருந்து 18 மணி நேரம் பயணித்து செல்லக் கூடிய அமெரிக்காவுக்கு, ஒரு மணி நேரத்தில் சென்று விட முடியும் என்றும் சிவன் கூறியிருக்கிறார். முக்கியமான இந்த வெற்றிக்கும், சிறப்பான ஆராய்ச்சிக்கும் காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரையும் தி.மு. கழகத்தின் சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மற்றொரு மைல் கல் சாதனையாக - காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சி, திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறக்கும் நவீன ராக்கெட் எஞ்சின் பரிசோதனை நேற்றையதினம் (28-8-2016) வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. “ஸ்கிரேம்ஜெட்"" என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்தப் பரிசோதனை வெற்றி பெற்றதை, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு திருப்பு முனை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். திருவனந்தபுரம் விக்ரம் சாராப...

சட்டம்

1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4) 2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217 3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404 4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166 5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம். 6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2) 7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312. 8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ் எவர் ஒருவரும் பார்வையிடலாம். 9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43 10, ஒரு குற்றம் நடைபெறு...

"கலகக்காரர் தோழர் பெரியார்" என்ற நாடகம்

"ஜோக்கர்" படத்தில், ‘பெட்டிகேஸ்’ பொன்னூஞ்சல் பாத்திரத்தில் நடித்த பேராசிரியர் மு.ராமசாமி அவர்களுடைய பாத்திரமும் நடிப்பும் பலரால் பாராட்டப்படுகிறது. தோழர் பெரியாரின் 125 ஆவது பிறந்தநாளை கொண்டாடும்விதமாக, பேரா மு. ராமசாமி இயக்கத்தில் "கலகக்காரர் தோழர் பெரியார்" என்ற நாடகம் தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டது. தோழர் பெரியாராக மு.ராமசாமி அவர்களே நடித்திருந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் அப்போதைய தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் நடந்தபோது ந ான் நேரில் சென்று பார்த்தேன். என்னோடு என் கல்லூரி நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர். அனைவருக்கும் பிடித்தவிதமாக (புரியும்விதமாக) இந்த நவீன நாடகம் அமைந்திருந்தது. ஒரு நாடகத்தை அரங்கத்தில் பார்ப்பதுதான் முழுமையான அனுபவத்தைத் தரும் என்றாலும், இந்த காணொளி பதிவுகள் பெருமளவுக்கு அந்த அனுபவத்தை சிதைக்காமல் உங்களுக்கு கொடுக்கும் என்று நினைக்கிறேன். பார்த்து பயன் பெறுக. Part 1 :  https://www.youtube.com/watch?v=koOH1wqLXt4 Part 2 :  https://www.youtube.com/watch?v=rCKyLWLJAAk Part 3 :  https://ww...

விண்வெளியில் செலுத்தும் Scramjet Rocket Engine

தீக்குச்சி, பெட்ரோல் முதல் அணைத்து எரிபொருளும் எரிய தேவைபடுவது ஆக்சிஜன் இது நமக்கு காற்றில் இலவசமாக கிடைக்கிறது அதனால் நாம் அதை ஒருபொருட்டாக நினைப்பதில்லை. நமது காருக்கு போடுகிற பெட்ரோலை கூட கார்புரடோர் மூலமாக ஆக்சிஜன் கலந்து தான் எரிக்கிறோம் இப்பொழுது கதைக்கு போவோம். விண்வெளியில் செலுத்தும் ராகேட்களுக்கு அது பாயும் வேகத்திற்கு ஏற்ப காற்றில் இருந்து ஆக்சிஜனை ராக்கெட் எரிபொருளுடன் கலந்து எரிக்கும் தொழில்நுட்பம் நமது நாட்டில் இல்லாமல் இருந்தது. எனவே திரவமாக்கபட்ட ஆக்சிஜனை ராக்க ெட் எரிபொருளுடன் கலந்து தான் ராக்கெட் செலுத்தப்பட்டு வந்தது. வெளியில் இருந்து ஆக்சிஜன் கிடைக்காததால் இந்த திரவ ஆக்சிஜனை ராக்கெட் பயன்படுத்தி கொள்ளும். இதனால் ராகெட்டின் எடை கூடும் இந்த திரவ ஆக்சிஜனுக்கு பதிலாக காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுக்கும் தொழில்நுட்பத்திற்கு பெயர்தான் ஸ்க்ரம்ஜெட் எனப்படுகிறது. இது ராக்கெட்டின் எரிபொருள் எடையை குறைத்து ராக்கெட் சுமந்து செல்லும் பலனுள்ள பொருளின் (செயற்கைக்கோள், குண்டு) எடையை கூட்டுகிறது அதுபோக ஒலியின் வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் செல்லும் ராகேட்டிர்க்கு அதே வேகவி...

இந்தியாவின் தேசிய மொழி- நிச்சயமாக இந்தி அல்ல!

இந்தியாவின் தேசிய மொழி- நிச்சயமாக இந்தி அல்ல! Published: Monday, November 16, 2009, 15:00 [IST] டெல்லி: இந்தியாவின் தேசிய மொழி இந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி. ஆனால் இந்தியை ஆட்சி மொழியாக்க தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சியை அன்றைய மத்திய அரசு கைவிட்டது. இந்தித் திணிப்பை கண்டித்து தமிழகத்தில்தான் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக தொடருவது என அப்போது தீர்மானிக்கப்பட்டது. இன்று வரை இதுதான் அமலிலும் உள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இன்று வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக, கிட்டத்தட்ட அலுவலக மொழியாகவே மாறிப் போயுள்ளது. பின்னர் 1967ம் ஆண்டு ஆங்கிலத்தை அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தனிச் சட்டத் திருத்தமே கொண்டு வரப்பட்டது. அப்போது இந்திதான் ஆட்சி மொழி, அதில் எந்த ம...

திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. தமிழர் என்பதன் திரிந்த வடிவமே திராவிடர் என்றால், பிற மொழியாளர்கள் ‘திராவிடர்’ என்று எப்படி தங்களை அழைப்பார்கள்? திராவிடர் இயக்கம் வேறு; திராவிட இயக்கம் வேறு. தமிழ்மொழி பேசுவதால் பார்ப்பனரை தமிழர்களாக ஏற்பீர்களா? திராவிடர் வடமொழிச் சொல்லாக இருந்தும் பார்ப்பான் அதை ஏற்க மறுப்பது ஏன்? பிற மன்னர் படையெடுப்பால் வென்ற பகுதி யில் தமது முகவர்களைக் குடியமர்த்தியதற்குக் காரணம் என்ன? இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்கூட சட்டக்...

இதுதான் தலைவர் அதிரடி ..

தூத்துக்குடியில் சுமார் 20,30 சுவர்களில் 'இராமசாமிக் கழுதைக்கு செருப்படி' என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழுகவில்லை. இங்கும் 'இராமசாமிக் கழுதை செத்துவ ிட்டது' என்றும் 'இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி' என்றும் எழுதி இருந்தது. 'இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும்' என்று எழுதியிருந்த்தைப் பார்த்து சந்தோசப்பட்டிருந்தேயானால் , "இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது" என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, "இராமசாமி மனைவி கற்புக்கரசி" என்று எழுதியிருந்த்தை பார்த்து மகிழ்ச்சியடைந்து , மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன்பெற்று இருந்தால் "இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி" என்பதற்கு நான் வருத்தப்படனும். ஆகவே அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை."- தந்தை பெரியார்.

காட்டுமிராண்டி மொழி!

காட்டுமிராண்டி மொழி! தந்தைப் பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவாளர். சமுதாயச் சீர்சிருத்தக்காரர். பழமை உணர்வுகளையும் கொள்கைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, அவற்றைத் தவறு சரியென்று தேர்ந்து, நன்மை தீமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மக்கள் அறிவியலாளர். புதுமை விரும்பி. எனவே, தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார். அது ஒரு பழைமையான மொழி என்பதற்காகவோ, சிறந்த இலக்கண இலக்கியச் செழுமை வாய்ந்தது என்பதற்காகவோ, அவர் அதைப் பாராட்டவில்லை. அதில் உள்ள பாட்டு இலக்கியங்களையும், கதை இலக்கியங்களையும், வேறு சில கூறுகளையும் மக்கள் மனநலன் அறிவுநலன் இவற்றுக்குப் பயன் தரும் வகையில் ஆராய்ந்தார். அவற்றிலுள்ள மூட நம்பிக்கைகளையும் மக்களுக்குதவாத பழமைக் கருத்துகளையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவற்றைக் கடுமையாகச் சாடினார். பொதுவாக மக்கள் வாழ்க்கைக்குப் பயன் தராத எந்த மொழிக் கூறையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் தமிழ்மொழி புலவர்கள் பாங்கிலேயே அடைபட்டுக் கிடந்து, பொதுமக்கள் நிலைக்கு எளிமையாக பயன்படுத்த முடியாமல் இருப்பதை அவர் எண்ணி வருந்தினார். அதை அறிவியல் சிந்தனையுடன...

சமஸ்கிருதம் எங்கே?

பஞ்சக்கச்சம் கட்டிக்கொண்டு சதுராடும் ஆரியம்! இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆம் அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இதில் எந்த மாநிலத் திலும் பேசப்படாத மொழி ஒன்று உண்டு என்றால், அது சமஸ்கிருதம் மட்டுமே என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள். சமஸ்கிருதம் எங்கே? இந்தி மொழி - டில்லி, உ.பி., பீகார், அரியானா, ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஜார் கண்ட், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது. அஸ்ஸாமி - அஸ்ஸாம் மாநிலத்திலும், அதனை ஒட்டிய வடகிழக்கு மாநிலத்திலும் பேசப்படும் மொழி வங்க மொழி - மேற்குவங்கம், மற்றும் அஸ்ஸாமில் பேசப்படும் மொழி. டோகிரி மற்றும் உருது ஜம்மூ-காஷ்மீரில் பேசப்படும் மொழி குஜராத்தி - குஜராத் மற்றும் வட மகாரஷ்டிராவில் சில இடங்களில் பேசப் படும் மொழி கன்னடம் - கருநாடகம், மராட்டிய மாநிலத்தின் சிலபகுதிகளில் பேசப்படும் மொழி கொங்கனி - கோவா மாநிலத்தில் பேசப்படும் மொழி காஸி - மேகாலயா மாநிலத்தில் பேசப் படும் மொழி மலையாளம் - கேரளாவில் பேசப்படும் மொழி மராட்டி - மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி மணிப...

இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க

இந்து மதத்தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ்லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை? நம்பிக்கையை காயப்படுத்தலாமா? பகுத்தறிவாளர்களே! உங்க குடும்பத்திலே இருக்கிறவங்க கோவிலுக்கு போறாங்க! அதை உங்களாலே திருத்த முடியலை, ஊரைத் திருத்த வரீங்களா? நாத்திகம் பேசுறவங்க இந்து மதத் தைத்தானே விமர்சிக்கிறீங்க இஸ் லாமையோ கிறித்துவத்தையோ ஏன் தொடுவதில்லை ? உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே அப்புறம் கோயில்ல யார் பூஜை செய்தா உங்களுக்கென்ன ? எந்த மொழியில அர்ச்சனை செய்தால் உங்களுக்கு என்ன? கோவில் நுழைவுப் போராட் டத்துக்கும் உங்களுக்கும் சம்பந்தம் என்ன ? நீங்களும் எவ்வளவு காலமா கத்திப்பாக்குறீங்க ஜனங்க ஏன் உங்களை ஏத்துக்கலை? பெரியார் பிள்ளையார் சிலையை உடைச்சார் ஆனால் இப்போ முக்குக்கு முக்கு மூலைக்கு மூலை பிள்ளையார் சிலை முளைத்துள்ளதே ! உங்க பாதை தப்புன்னு இப்பவாவது புரிஞ்சுக்கோங்க! அறிவியல் பகுத்தறிவு எனச் சொல்லி ஆத்திகர் மனதை புண்படுத்தலாமா ? - இப்படிப்பட்ட கேள்விகளை சாதா ரண பாமரன் கேட்டால் பரவாயில்லை; அறியாமை என விளக்கலாம் . ஆனால் இது போன்ற குதர்க்கமான கேள்வி களை மெத்தப் படித்தவர்கள் முக ந...

‪#‎பெரியார்_ஏன்_72_வயதில்_திருமணம்_செய்தார்‬

‪#‎ பெரியார்_ஏன்_72_வயதில்_திருமணம்_செய்தார்‬ ? சில அரவேக்காட்டு பதர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்! 1948 ஆண்டு பெரும் செல்வந்தரான அந்த கிழவனுக்கு வயது 72. முது மைக்கே உண்டான நோய்கள் ஒருபுறம், தன் போராடி வரும் மக்களின் மேம்பாட்டு பற்றிய சிந்தனை ஒருபுறம், அதற்காக உருவாக்க பட்ட கழகத்தின் எதிர்காலம் பற்றிய கவலை ஒருபுறம், தனது மரணத்திற்கு பின் செத்துக்களை அனுபவிக்க காத்து கிடக்கும் கூட்டம் மறுபுறம் என அவரின் சிந்தனைகள் படபடத்து கொண்டிருக்கிறது. மருத்துவ வசதிகள் இல்லாத அந்த கால கட்டத்தில் மருத்துவரோ ஜாடையாக உடலை கவனித்து கொல்ல கூறுவதை அந்த கிழவனால் ஊகித்து கொல்ல முடிகிறது. முதலில் தன் சொத்துக்களை மக்களுக்கு அதாவது கழகத்திற்கு எழுதி வைத்து விட தீர்மானிக்கிறார். தனது சட்ட ஆலோசகர்கள் வந்துவிட்டார்கள். தீராத வயிற்று வலி, நிற்காத முத்திரம் என வேதனைகளை புறம்தள்ளி விட்டு தொடங்குகிறார். எனது சொத்துக்கள் பல கோடிகள் உள்ளது. அதை வைத்து என்னால் உயிரை நீட்டித்து கொல்லவும் முடியாது. நாளை நான் கண் விழிப்பேனா என்றால் அதை என் மருத்துவர் தான் சொல்ல வேண்டும். ஆதலால் என் சொத்துக்களை கழகத்திற்கு எழுதி...