Skip to main content

Posts

Showing posts from 2016

2ஜி வாதத்தின்படி 1,80,000 கோடி இழப்பு, ஊழல் என்றால் 3,75,000 கோடிகள் இழப்பும் ஊழல்தானே

ஊளையிட்ட நரிகள் எங்கே பதுங்கின? 5.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் விற்பனையை இலக்காக வைத்த மோடி அரசுக்கு கிடைத்தது 65,789 கோடிதான். இதன்மூலம் அரசுக்கு மூன்றேமுக்கால் லட்சம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2ஜி வாதத்தின்படி 1,80,000 கோடி இழப்பு, ஊழல் என்றால் 3,75,000 கோடிகள் இழப்பும் ஊழல்தானே? 2016-17 ஆம் ஆண்டிற்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் பல்வேறு மூடநம்பிக்கைகளின் காரணமாக அரசே தேதியைத் தள்ளிப்போட்டு வந்தது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி விஜய தசமியன்று விஜய முகூர்த்த்தில் துவங்கப்பட்டது. 1,800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை அலைகற்றைக் கான அடிப்படை ஏலத் தொகை ரூ.2,873 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 900 மெகாஹெர்ட்சுக்கு ரூ.3,341 கோடியாகவும், 800 மெகாஹெர்ட்சுக்கு ரூ.5,819 கோடியாகவும், 2,00 மெகாஹெர்ட்சுக்கு ரூ.2,100 கோடி யாகவும், 700 மெகாஹெர்ட்சுக்கு ரூ.11,485 கோடியாகவும், 2,300 மெகாஹெர்ட்சு மற்றும் 2,500 மெகாஹெர்ட்சு அலைவரிசை அலைக்கற்றைக்கு தலா ரூ.817 கோடி யாகவும் அடிப்படை ஏலத் தொகை நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. மொத்தம் 2354.55 மெகா ஹெர்ட்சு செல்போன் அலைவரிசைகள் அனைத்து அலைவெண் பட்டைகளிலும் ஏலம் ...

மனம் திரும்புங்கள்

நன்றி அஸ்விகா சிரிநிதி நேற்று நான் அவசரமாக என் அலுவலகத்திற்கு சென்று கொன்றி௫ந்தேன்... ஒருவர் கிறிஸ்தவ பாதிரி என்று அறிமுக படுத்திவிட்டு என்னிடம் ஒரு பிட் நோட்ட ீசை கொடுத்து படித்து பாருங்கள் என்றார்... அதில்.. ""மனம் திரும்புங்கள்... தேவன் பாவிகளுக்கு சமீபமாயிருக்கிறார் என்று தலைப்பிட பட்டிருந்தது"" யார் பாவிகள்..? என்று கேட்டேன்...! நாம் தான் என்றார்..! நாம் என்றால் நானுமா..? என கேட்டேன்.. ஆம்..என்றார் நான் என்ன பாவம் செய்தேன் என்றேன்...! மனிதர்கள் பிறந்ததே பாவத்தினால் தான் என்றார்..! உங்கள் மத கோட்பாடுபடி மனிதர்களை படைப்பது யார்...?என்றேன்..! ஏசு என்றார்.. அப்படியானால் இந்த பாவபட்ட மனிதர்களை மீண்டும் மீண்டும் ஏசு ஏன் பிறக்க செய்கிறார் ..? அவர்... ஙே...ஙே...ஙே... நெளிந்தார். ----———---------------------- சரி ஏன் பாவபட்ட மனிதர்கள் என்று சொல்கிறீர்கள்??? என்று கேட்டேன்..! அது சாத்தான் செய்த சதி என்றார்..! சாத்தானா..? எப்படி..? நான் கேட்டேன்..! ஆதாம் ஏவாள் பாம்பு கதையை சொன்னார்..! கவனமாக கேட்டுவிட்டு.. சாத்தான் எப்பொழுது தோன்றினான்...? இயே...

'தீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்''

''தீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்'' தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50-ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும், முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. "மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்" என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்...

மதங்களின் மூடத்தனம்

சாத்தான் மிக பெரியவன் வேளாங்கண்ணி கோயிலுக்கு மாதாவை கும்பிடப் போன பக்தர்களை சுனாமி சொந்தம் கொண்டாடி பரலோகத்துக்கு அழைத்துப்போய்விட்டது. பூரி ஜெகநாதரை வழிபட பாதயாத்திரைப் போன பக்தர்களை வெள்ளமும் மண்சரிவும் சேர்ந்து சொர்க்கத்துக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தது. அல்லாவால் அழிக்க முடியாத சாத்தானை கல்லால் எறிந்து கொல்லலாமென போன ஹஜ் பயணிகளை காலடியில் போட்டு நசுக்கி ஏக இறைவனோடு ஐக்கியமாக்கிவிட்டது ஜன நெரிசல். முட்டாள் தனமும் மூட நம்பிக்கைகளும் எந்தவொரு தனி மதத்துக்கும் சொந்தமானதல்ல என்பதே இவையுணர்த்தும் செய்தி. வேளாங்கண்ணிக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்துச் சென்று அறையில் தங்கி உல்லாசமாக இருந்தபோது சிக்கிய பாதிரியார். செக்ஸ் அக்ரிமெண்ட் போட்டு பெண்களை அனுபவித்த நித்யானந்தா, கணவனை இழந்த பெண்ணிடம் தகாதபடி நடந்துகொண்டது மட்டுமல்லாமல் சங்கரராமனையும் கொன்ற ஜெயேந்திரன், கோவில் கருவறையிலேயே பெண்களோடு சல்லாபித்த தேவநாதன், இன்னும்.. இன்னும்.. அல்லாவின் பேரை சொல்லி புனிதப்போர் எனும் போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிற தலிபான், ஐஎஸ் தீவிரவாதிகள்.. தன் பேரை சொல்லி யார் எந்த அநீதியில் ஈடுபட்...

ஆரியர்" என்பதன் ஒரே நேர் எதிர்சொல் "திராவிடர்

ஆரியர்" என்பதன் ஒரே நேர் எதிர்சொல் "திராவிடர்" -0- அந்த அடிப்படையில் தமிழனும், தெலுங்கனும், மலையாளியும் கன்னடனும் மட்டுமல்ல, பார்ப்பனரல்லாத பிகாரியும் , மராட்டியனும் கூட திராவிடன் தான். -0- ஒருவனுக்கு எல்லா காரணங்களுக்கும் எல்லா தேவைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரே ஒரு அடையாளம் மட்டுமே இருக்க முடியாது! நான், உயிரனத்தால் மனிதன், பாலினத்தால் ஆண், மொழியினத்தால் தமிழன், அரசியல் கொள்கைப்படி கம்யூனிஸ்ட். அதேமாதிரி ஆரிய பண்பாட்டை எதிர்க்கவேண்டிய இடத்தில் திராவிடன். அதுபோல வேறு சிலருக்கு ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட இனம் என்ற அடையாளம் தேவைப்படும் இடங்களில் தலித். -0- தலித் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் தலித், தமிழன் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் தமிழன். திராவிடன் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் திராவிடன், தமிழன் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் தமிழன். தொழிலாளர் உரிமை என்கிற இடத்தில் தொழிலாளி என்கிற வர்க்க அடையாளமும் உண்டு .. இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரணான அடையாளங்கள் அல்ல .. மாறாக இவற்றை ஒன்றுக்கொன்று முரண்படுத்தி மோத விட...

நானும் நெரிஞ்சிப் பேட்டை சாமியாரும்!

நானும் நெரிஞ்சிப் பேட்டை சாமியாரும்! Read more at:  http://tamil.oneindia.com/news/tamilnadu/thanthai-periyar-autobiography-263025.html தந்தை பெரியார் ஒரு தடவை, எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப் பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) வந்தார். அது 1902-ம் வருஷமாய் இருக்கலாம்; அவருக்கு, எங்கள் ஊர் நகரத்துச் செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய் பிக்ஷ (பிட்சை) நடத்துகிறார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபா கொடுத்தார். பெரிய சமாராதனை நடக்கிறது. அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன்; அவனும் கூட வந்திருந்தான். அவன், ஈரோட்டில் ஒரு வியாபாரிக்குக் கடன் கொடுக்க வேண்டும்; அது கோர்ட்டில் டிக்ரி ஆகி இருந்தது. அந்தச் சமயம், அந்த வியாபாரி அக்கடனை வசூல் செய்ய, என்னை யோசனை கேட்டார். நான் அவசரமாய், 'படிபோட்டு, வாரண்டு கொண்டுவா' என்று சொன்னேன். உடனே நிறைவேற்று விண்ணப்பம் போட்டு, அன்றே, வாரண்டு வந்தது. மறுநாள், பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக் கொண்டு' சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார். நான் அவர்களைக் கூட்டிக் கொண்டு, ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த 'எல்லைய்யர் சத்திரம்' என...

நானும் நெரிஞ்சிப் பேட்டை சாமியாரும்!

நானும் நெரிஞ்சிப் பேட்டை சாமியாரும்! Read more at:  http://tamil.oneindia.com/news/tamilnadu/thanthai-periyar-autobiography-263025.html தந்தை பெரியார் ஒரு தடவை, எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப் பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) வந்தார். அது 1902-ம் வருஷமாய் இருக்கலாம்; அவருக்கு, எங்கள் ஊர் நகரத்துச் செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய் பிக்ஷ (பிட்சை) நடத்துகிறார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபா கொடுத்தார். பெரிய சமாராதனை நடக்கிறது. அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன்; அவனும் கூட வந்திருந்தான். அவன், ஈரோட்டில் ஒரு வியாபாரிக்குக் கடன் கொடுக்க வேண்டும்; அது கோர்ட்டில் டிக்ரி ஆகி இருந்தது. அந்தச் சமயம், அந்த வியாபாரி அக்கடனை வசூல் செய்ய, என்னை யோசனை கேட்டார். நான் அவசரமாய், 'படிபோட்டு, வாரண்டு கொண்டுவா' என்று சொன்னேன். உடனே நிறைவேற்று விண்ணப்பம் போட்டு, அன்றே, வாரண்டு வந்தது. மறுநாள், பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக் கொண்டு' சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார். நான் அவர்களைக் கூட்டிக் கொண்டு, ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த 'எல்லைய்யர் சத்திரம்' என...

கடவுள் ஒருவராம் - ஆனால் பிறப்பு நான்காம்! பிள்ளையார் பிறப்புப்பற்றி தந்தை பெரியார்

இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காத ு என்பது போல் எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும் அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியவை ஏற்படுத்தி இருப் பவை அவை களுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாய்க்கொண்டே வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல. இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும் இந்துக்கள் என்ப வர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங் கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதுண்டு. நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங் குவதுமாக இப்போது அமலில் இ...

சம்புகன் கதை என்ன ?

சம்புகனின் கதையை முழுமையாக அறியமுடியவில்லை . அதைச் சொல்லவமுடியுமா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார் . அந்தத் தேடலின் பதிவாக இதோ சம்புகனின் கதை  ஸ்ரீ வால்மீகி அருளிய இராமானணத்தில் உள்ளபடி . இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார். அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன். வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் . "ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் . ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் . எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர். மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில்...

இஸ்ரோவின் “ஸ்கிரேம்ஜெட்" சோதனை வெற்றிக்கு பாராட்டு !

இஸ்ரோவின் “ஸ்கிரேம்ஜெட்" சோதனை வெற்றிக்கு பாராட்டு ! விண்வெளி விமானத்தில் ஸ்கிரேம்ஜெட் என்ஜினைப் பயன்படுத்தும் போது, இப்போது இந்தியா விலிருந்து 18 மணி நேரம் பயணித்து செல்லக் கூடிய அமெரிக்காவுக்கு, ஒரு மணி நேரத்தில் சென்று விட முடியும் என்றும் சிவன் கூறியிருக்கிறார். முக்கியமான இந்த வெற்றிக்கும், சிறப்பான ஆராய்ச்சிக்கும் காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரையும் தி.மு. கழகத்தின் சார்பில் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மற்றொரு மைல் கல் சாதனையாக - காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனை உறிஞ்சி, திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறக்கும் நவீன ராக்கெட் எஞ்சின் பரிசோதனை நேற்றையதினம் (28-8-2016) வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. “ஸ்கிரேம்ஜெட்"" என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்தப் பரிசோதனை வெற்றி பெற்றதை, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு திருப்பு முனை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். திருவனந்தபுரம் விக்ரம் சாராப...

சட்டம்

1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4) 2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217 3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404 4, அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166 5, எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம். 6, சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம். Article 19(1) , CRPC 303,302(2) 7, வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312. 8, இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ் எவர் ஒருவரும் பார்வையிடலாம். 9, இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43 10, ஒரு குற்றம் நடைபெறு...

"கலகக்காரர் தோழர் பெரியார்" என்ற நாடகம்

"ஜோக்கர்" படத்தில், ‘பெட்டிகேஸ்’ பொன்னூஞ்சல் பாத்திரத்தில் நடித்த பேராசிரியர் மு.ராமசாமி அவர்களுடைய பாத்திரமும் நடிப்பும் பலரால் பாராட்டப்படுகிறது. தோழர் பெரியாரின் 125 ஆவது பிறந்தநாளை கொண்டாடும்விதமாக, பேரா மு. ராமசாமி இயக்கத்தில் "கலகக்காரர் தோழர் பெரியார்" என்ற நாடகம் தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டது. தோழர் பெரியாராக மு.ராமசாமி அவர்களே நடித்திருந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் அப்போதைய தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் நடந்தபோது ந ான் நேரில் சென்று பார்த்தேன். என்னோடு என் கல்லூரி நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர். அனைவருக்கும் பிடித்தவிதமாக (புரியும்விதமாக) இந்த நவீன நாடகம் அமைந்திருந்தது. ஒரு நாடகத்தை அரங்கத்தில் பார்ப்பதுதான் முழுமையான அனுபவத்தைத் தரும் என்றாலும், இந்த காணொளி பதிவுகள் பெருமளவுக்கு அந்த அனுபவத்தை சிதைக்காமல் உங்களுக்கு கொடுக்கும் என்று நினைக்கிறேன். பார்த்து பயன் பெறுக. Part 1 :  https://www.youtube.com/watch?v=koOH1wqLXt4 Part 2 :  https://www.youtube.com/watch?v=rCKyLWLJAAk Part 3 :  https://ww...

விண்வெளியில் செலுத்தும் Scramjet Rocket Engine

தீக்குச்சி, பெட்ரோல் முதல் அணைத்து எரிபொருளும் எரிய தேவைபடுவது ஆக்சிஜன் இது நமக்கு காற்றில் இலவசமாக கிடைக்கிறது அதனால் நாம் அதை ஒருபொருட்டாக நினைப்பதில்லை. நமது காருக்கு போடுகிற பெட்ரோலை கூட கார்புரடோர் மூலமாக ஆக்சிஜன் கலந்து தான் எரிக்கிறோம் இப்பொழுது கதைக்கு போவோம். விண்வெளியில் செலுத்தும் ராகேட்களுக்கு அது பாயும் வேகத்திற்கு ஏற்ப காற்றில் இருந்து ஆக்சிஜனை ராக்கெட் எரிபொருளுடன் கலந்து எரிக்கும் தொழில்நுட்பம் நமது நாட்டில் இல்லாமல் இருந்தது. எனவே திரவமாக்கபட்ட ஆக்சிஜனை ராக்க ெட் எரிபொருளுடன் கலந்து தான் ராக்கெட் செலுத்தப்பட்டு வந்தது. வெளியில் இருந்து ஆக்சிஜன் கிடைக்காததால் இந்த திரவ ஆக்சிஜனை ராக்கெட் பயன்படுத்தி கொள்ளும். இதனால் ராகெட்டின் எடை கூடும் இந்த திரவ ஆக்சிஜனுக்கு பதிலாக காற்றில் இருக்கும் ஆக்சிஜனை எடுக்கும் தொழில்நுட்பத்திற்கு பெயர்தான் ஸ்க்ரம்ஜெட் எனப்படுகிறது. இது ராக்கெட்டின் எரிபொருள் எடையை குறைத்து ராக்கெட் சுமந்து செல்லும் பலனுள்ள பொருளின் (செயற்கைக்கோள், குண்டு) எடையை கூட்டுகிறது அதுபோக ஒலியின் வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் செல்லும் ராகேட்டிர்க்கு அதே வேகவி...

இந்தியாவின் தேசிய மொழி- நிச்சயமாக இந்தி அல்ல!

இந்தியாவின் தேசிய மொழி- நிச்சயமாக இந்தி அல்ல! Published: Monday, November 16, 2009, 15:00 [IST] டெல்லி: இந்தியாவின் தேசிய மொழி இந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது. அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி. ஆனால் இந்தியை ஆட்சி மொழியாக்க தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சியை அன்றைய மத்திய அரசு கைவிட்டது. இந்தித் திணிப்பை கண்டித்து தமிழகத்தில்தான் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக தொடருவது என அப்போது தீர்மானிக்கப்பட்டது. இன்று வரை இதுதான் அமலிலும் உள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இன்று வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக, கிட்டத்தட்ட அலுவலக மொழியாகவே மாறிப் போயுள்ளது. பின்னர் 1967ம் ஆண்டு ஆங்கிலத்தை அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தனிச் சட்டத் திருத்தமே கொண்டு வரப்பட்டது. அப்போது இந்திதான் ஆட்சி மொழி, அதில் எந்த ம...

திராவிட’ எதிர்ப்பாளர்களின் குழப்பம் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. தமிழர் என்பதன் திரிந்த வடிவமே திராவிடர் என்றால், பிற மொழியாளர்கள் ‘திராவிடர்’ என்று எப்படி தங்களை அழைப்பார்கள்? திராவிடர் இயக்கம் வேறு; திராவிட இயக்கம் வேறு. தமிழ்மொழி பேசுவதால் பார்ப்பனரை தமிழர்களாக ஏற்பீர்களா? திராவிடர் வடமொழிச் சொல்லாக இருந்தும் பார்ப்பான் அதை ஏற்க மறுப்பது ஏன்? பிற மன்னர் படையெடுப்பால் வென்ற பகுதி யில் தமது முகவர்களைக் குடியமர்த்தியதற்குக் காரணம் என்ன? இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்கூட சட்டக்...