Skip to main content

மகாசிவராத்திரியாம்

சைவர்கள் மகாசிவராத்திரி கொண்டாடினால், வைணவர்கள் வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடு வார்கள்.
இந்த இரண்டு அமைப்பினரும் முதன்மைப்படுத்தும் கடவுள்களின் கதைகளோ புராணங்கள்படி ஆபாச - கழிசடைத்தனம் வழியும் இந்து மகாக்கடல் என்றுதான் சொல்லவேண்டும்.
சிவராத்திரியன்று பட்டினிக் கிடந்தால் எல்லாப் பாவங்களும் நீக்கப்பட்டு சிவலோக பதவி அடைந்து விடுவார்களாம்.
அதேபோல, வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்தால் உடனே அவர்களுக்கு சொர்க்கவாசல் திறந்துவிடும் - அக்கோவில்களில் சொர்க்கவாசல் நுழைவதற்கென்றே தனித்த ஏற்பாடுகளும் உண்டு.
இதில் வேடிக்கை என்னவென்றால், அப்படி சொர்க்க வாசலில் நுழைந்தவர்கள் திரும்பி அவரவர் கள் வீட்டுக்குத்தான் வருகிறார்கள். எல்லாம் பிள்ளை விளையாட்டே!
இதோ ஒரு எடுத்துக்காட்டு:
ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும், ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோவில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பல காரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோவிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப் போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத் திரத்தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச்சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும், பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால், பார்ப்பனப் பூசாரியால் கொல்லப்பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம்.
இதுபோலஇன்னும்பலசமாச்சாரங்கள்உண்டே! இவற்றில் கடுகத்தனை அளவுக்காவது அறிவுக்குப் பொருத்தமான அம்சமோ, ஒழுக்கத்தை வளர்த்தெடுக் கும் தன்மையோ உண்டா?
எதேச்சையாக சிவராத்திரியன்று எது நடந்தால் கூடப் போதும், சம்பந்தப்பட்டவன் சிவலோக பதவி அடைகிறான் என்றால், இது ஒருவகையான மலிவான, மதத்துக்கு ஆள் சேர்க்கும் ஏற்பாடு அல்லாமல் வேறு என்ன?
தாயத்து விற்கும் வியாபாரி ஒருவன் சகல நோய்க் கும் இதோ ஒரு கண்கண்ட மருந்து என்று சொல்லி பாமர மக்களின் பையில் உள்ள பணத்தைக் கறப்பது மாதிரியான ஏமாற்று மோசடி வேலையல்லாமல் வேறு என்னவாம்!
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப் பானுக்குக் கூட மோட்சம் அளித்ததாகக் கூறுவதுதானே திருவிளையாடல் புராணம்!
சிவராத்திரி என்று கூறி, சிவனுக்காக பட்டினி விரதம் இருக்கிறார்களே - அந்த மூலக்கடவுளாவது ஒழுக்கம் உள்ளவனா?
தாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளை சிவன் கற்பழித்தான் என்றும், கோபமடைந்த ரிஷிகள் சிவன்மீது சாபம் விட்டதாகவும், அதன் காரணமாக சிவனின் சிசுனம் (ஆண் குறி) அறுந்து விழுந்ததாகவும், கீழே விழுவதை அறிந்த அவனது மனைவி பார்வதி தேவியார் தன் குறியால் தாங்கிப் பிடித்ததாகவும், அதன் அடையாளம்தான் சிவன் கோவில்களில் வைத்து வணங்கப்படும் சிவலிங்க வடிவம் என்று வெட்கமில்லாமல், அருவருப்பு இல்லாமல் புராணம் எழுதி, அதனை நிலைக்க வைக்கக் கோவில் எழுப்பி, கருவறையில் இந்தக் கேவலமான உருவத்தை வடித்து வைத்து, ‘பக்தர்களே, விழுந்து விழுந்து கும்பிடுங்கள்!’ என்கிறார்கள் என்றால், இதைவிட மானக்கேடு உண்டா?
இப்படிப்பட்ட கடவுளுக்கு 112 அடியில் சிலை வடிப்பதும், அதனைத் திறந்து வைக்க இந்தியாவின் பிரதமரும், மூன்று மாநில முதலமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் ஓடோடி வருவதும் அவமானப்பட வேண்டிய, தலைகுனிய வேண்டிய ஒன்றல்லவா!
இதனைப்பற்றி இந்தக் கண்ணோட்டத்தில் எழுத ‘விடுதலை’யைத் தவிர வேறு நாதி உண்டா?
திராவிடர் கழகத்தைத் தவிர வேறு அமைப்புதான் உண்டா? வினா எழுப்புவதற்குத் திராவிடர் கழகத் தலைவரைத் தவிர வேறு யார்தான் உள்ளனர்?
இந்து மதம் என்றாலே அது ஓர் ஆபாசக்கிடங்கு என்பதற்கு அத்தாட்சிதான் இந்த சிவராத்திரி பண்டி கையும், அதன் தாத்பரியங்களும்.
நாகரிகம் வளர்ந்த ஒரு சமுதாயத்தில்தான், கால கட்டத்தில்தான் நாம் வாழ்கிறோமா?
சிந்திப்பீர் பக்தர்களே!                                                                                                
                                                                            கலி. பூங்குன்றன்

Comments

Popular posts from this blog

சம்புகன் கதை என்ன ?

சம்புகனின் கதையை முழுமையாக அறியமுடியவில்லை . அதைச் சொல்லவமுடியுமா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார் . அந்தத் தேடலின் பதிவாக இதோ சம்புகனின் கதை  ஸ்ரீ வால்மீகி அருளிய இராமானணத்தில் உள்ளபடி . இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார். அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன். வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் . "ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் . ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் . எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர். மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில்...

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே!

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே! பெரியார் இறுதிவரை பார்ப்பனியத்தின் மீதும் இந்துமதத்தின் மீதுமட்டும் (பார்ப்பனர்கள் ,இந்துக்கள் மீத ல்ல .) ஏன் எதிர்த்தார் என்போரும் முழுவதும் படித்து தெளிவடையுங்கள் . ================ இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள். சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல். 1926க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) “மகாத்மா ” காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா? பகத்சிங் துhக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூட...

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம்

பெரியார்-அண்ணா-பாவாணர் : திராவிடம் இன்றையத் தமிழகச் சூழலில் திராவிட(ர்)/(ம்) என்ற “சொல்” பலராலும் பல் வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவான புரிதலில், திராவிடத்தைக் கொண்டு வந்தவர் பெரியார்தான் என்றும் ‘திராவிடம் என்பதே போலியான ஒன்று’ என ஒரு கருத்தும் உண்டு. “திராவிடந்தான் எல்லாம் தந்தது” என்ற மிகைப்படுத்தப்பட்டப் புரிதலும் உண்டு. எது சரி என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட்டு பெரியார், அண்ணா, பாவாணர் போன்றோர் திராவிட(ர்)/(ம்)-த்தை எப்பிடிக் கையாண்டனர்?அவையெல்லாம் ஒன்றா? என்பதைப் பற்றியே இப்பதிவு ! இவர்களில் எளிமையாகப் புரிந்துக் கொள்ளக் கூடியவர் பெரியார்தான். பெரியாரின் திராவிடரும்  திராவிடத் தமிழ் நாடும்  : பெரியார்தான் முதன்முதலில் திராவிடர் எனக் குறித்தார் என்பது உண்மையா? இல்லவே இல்லை ! அயோத்திதாசர்  ‘ சாதியற்ற திரவிட மஹா ஜன சபை ‘ என்னும் அமைப்பைத் துவக்கியது 1891-ல். அப்போது பெரியார்க்கு வயது 12 ! அதே நேரத்தில் ஜான்ரத்தினம் என்பவர் ‘ திரவிடர் கழகம் ‘ என்ற அமைப்பையும்  திராவிட பாண்டியன்  என்னும் பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். அ...