Skip to main content

Posts

Showing posts from 2017

பெரியார் தமிழை வளர்த்தார்; தமிழறிஞர்கள் ஜாதி, சமயத்தை வளர்த்தார்கள்

பெரியாரும் திராவிடஇயக்கமும் தமிழுக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்கிறார்களே? உண்மையா? க.சுரேசு, கயத்தாறு. பொய். பெரியார் ஒருவர் தான் தமிழுக்கும், தமிழனுக்கும் பாடுபட்ட தலைவர். தமிழ் அறிவு என்பது வேறு. தமிழ் உணர்வு என்பது வேறு. தமிழ் உணர்வோடு இருக்கிறவர்கள் தமிழ் அறிஞராகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்கள் பிழையோடு தமிழை பயன்படுத்துகிறவர்களாக இருந்தாலும் தவறில்லை. அதேபோல தமிழ் அறிஞர்கள் எல்லோரும் தமிழ் உணர்வோடு இருந்ததும் இல்லை. திரு.வி.க தமிழ் அறிஞர் தான். ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் நவசக்தி, தினசரி என்கிற சமஸ்கிருத பெயர்கள். பெரியார் தமிழறிஞர் இல்லை. ஆனால் அவர் நடத்திய பத்திரிகைகளின் பெயர்கள் ‘விடுதலை, குடியரசு, உண்மை’ என்கிற தனித்தமிழ் பெயர்கள். 1938ல் தமிழ் மீது இந்தி திணிப்பு நடந்த போது, அதை எதிர்க்க வேண்டும் என்கிற சொரணையற்று இருந்தார்கள் தமிழறிஞர்கள். மறைமலையடிகள் போன்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்டி, அவர்களை இழுத்து வந்து இந்தி எதிர்ப்பில் இறக்கியது பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம். மறைமலையடிகள் போன்றவர்களுக்கு நிறைய தமிழ் அறிவ...

இடஒதுக்கீட்டின் உண்மையை விளக்கி சொல்லப்பட்டுள்ள சிறப்பான காணொளி. காணுங்கள் Caste Reservation System | Must known facts | Pesatha Pechellam #01 | GV...

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே!

பெரியார் என்னசெய்து கிழித்தார் என சொல்லும் ஆத்திக அன்பர்களே! பெரியார் இறுதிவரை பார்ப்பனியத்தின் மீதும் இந்துமதத்தின் மீதுமட்டும் (பார்ப்பனர்கள் ,இந்துக்கள் மீத ல்ல .) ஏன் எதிர்த்தார் என்போரும் முழுவதும் படித்து தெளிவடையுங்கள் . ================ இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் “பஞ்சமர்கட்கு இடம் இல்லை” என்று அச்சிட்டார்கள். சென்னையிலே இந்த நிலை 90 ஆண்டுகட்கு முன்பு! இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல். 1926க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) “மகாத்மா ” காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா? பகத்சிங் துhக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, “ தேச பக்தர்கள்”வாய்மூட...

மகாசிவராத்திரியாம்

சைவர்கள் மகாசிவராத்திரி கொண்டாடினால், வைணவர்கள் வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடு வார்கள். இந்த இரண்டு அமைப்பினரும் முதன்மைப்படுத்தும் கடவுள்களின் கதைகளோ புராணங்கள்படி ஆபாச - கழிசடைத்தனம் வழியும் இந்து மகாக்கடல் என்றுதான் சொல்லவேண்டும். சிவராத்திரியன்று பட்டினிக் கிடந்தால் எல்லாப் பாவங்களும் நீக்கப்பட்டு சிவலோக பதவி அடைந்து விடுவார்களாம். அதேபோல, வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்தால் உடனே அவர்களுக்கு சொர்க்கவாசல் திறந்துவிடும் - அக்கோவில்களில் சொர்க்கவாசல் நுழைவதற்கென்றே தனித்த ஏற்பாடுகளும் உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால், அப்படி சொர்க்க வாசலில் நுழைந்தவர்கள் திரும்பி அவரவர் கள் வீட்டுக்குத்தான் வருகிறார்கள். எல்லாம் பிள்ளை விளையாட்டே! இதோ ஒரு எடுத்துக்காட்டு: ஒரு பார்ப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும், ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோவில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுவரன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில...