Skip to main content

Posts

Showing posts from September, 2016

மதங்களின் மூடத்தனம்

சாத்தான் மிக பெரியவன் வேளாங்கண்ணி கோயிலுக்கு மாதாவை கும்பிடப் போன பக்தர்களை சுனாமி சொந்தம் கொண்டாடி பரலோகத்துக்கு அழைத்துப்போய்விட்டது. பூரி ஜெகநாதரை வழிபட பாதயாத்திரைப் போன பக்தர்களை வெள்ளமும் மண்சரிவும் சேர்ந்து சொர்க்கத்துக்கு டிக்கெட் எடுத்து கொடுத்தது. அல்லாவால் அழிக்க முடியாத சாத்தானை கல்லால் எறிந்து கொல்லலாமென போன ஹஜ் பயணிகளை காலடியில் போட்டு நசுக்கி ஏக இறைவனோடு ஐக்கியமாக்கிவிட்டது ஜன நெரிசல். முட்டாள் தனமும் மூட நம்பிக்கைகளும் எந்தவொரு தனி மதத்துக்கும் சொந்தமானதல்ல என்பதே இவையுணர்த்தும் செய்தி. வேளாங்கண்ணிக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்துச் சென்று அறையில் தங்கி உல்லாசமாக இருந்தபோது சிக்கிய பாதிரியார். செக்ஸ் அக்ரிமெண்ட் போட்டு பெண்களை அனுபவித்த நித்யானந்தா, கணவனை இழந்த பெண்ணிடம் தகாதபடி நடந்துகொண்டது மட்டுமல்லாமல் சங்கரராமனையும் கொன்ற ஜெயேந்திரன், கோவில் கருவறையிலேயே பெண்களோடு சல்லாபித்த தேவநாதன், இன்னும்.. இன்னும்.. அல்லாவின் பேரை சொல்லி புனிதப்போர் எனும் போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிற தலிபான், ஐஎஸ் தீவிரவாதிகள்.. தன் பேரை சொல்லி யார் எந்த அநீதியில் ஈடுபட்...

ஆரியர்" என்பதன் ஒரே நேர் எதிர்சொல் "திராவிடர்

ஆரியர்" என்பதன் ஒரே நேர் எதிர்சொல் "திராவிடர்" -0- அந்த அடிப்படையில் தமிழனும், தெலுங்கனும், மலையாளியும் கன்னடனும் மட்டுமல்ல, பார்ப்பனரல்லாத பிகாரியும் , மராட்டியனும் கூட திராவிடன் தான். -0- ஒருவனுக்கு எல்லா காரணங்களுக்கும் எல்லா தேவைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரே ஒரு அடையாளம் மட்டுமே இருக்க முடியாது! நான், உயிரனத்தால் மனிதன், பாலினத்தால் ஆண், மொழியினத்தால் தமிழன், அரசியல் கொள்கைப்படி கம்யூனிஸ்ட். அதேமாதிரி ஆரிய பண்பாட்டை எதிர்க்கவேண்டிய இடத்தில் திராவிடன். அதுபோல வேறு சிலருக்கு ஜாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட இனம் என்ற அடையாளம் தேவைப்படும் இடங்களில் தலித். -0- தலித் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் தலித், தமிழன் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் தமிழன். திராவிடன் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் திராவிடன், தமிழன் என்கிற அடையாளம் தேவைப்படுகிற இடங்களில் தமிழன். தொழிலாளர் உரிமை என்கிற இடத்தில் தொழிலாளி என்கிற வர்க்க அடையாளமும் உண்டு .. இவையெல்லாம் ஒன்றுக்கொன்று முரணான அடையாளங்கள் அல்ல .. மாறாக இவற்றை ஒன்றுக்கொன்று முரண்படுத்தி மோத விட...

நானும் நெரிஞ்சிப் பேட்டை சாமியாரும்!

நானும் நெரிஞ்சிப் பேட்டை சாமியாரும்! Read more at:  http://tamil.oneindia.com/news/tamilnadu/thanthai-periyar-autobiography-263025.html தந்தை பெரியார் ஒரு தடவை, எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப் பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) வந்தார். அது 1902-ம் வருஷமாய் இருக்கலாம்; அவருக்கு, எங்கள் ஊர் நகரத்துச் செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய் பிக்ஷ (பிட்சை) நடத்துகிறார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபா கொடுத்தார். பெரிய சமாராதனை நடக்கிறது. அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன்; அவனும் கூட வந்திருந்தான். அவன், ஈரோட்டில் ஒரு வியாபாரிக்குக் கடன் கொடுக்க வேண்டும்; அது கோர்ட்டில் டிக்ரி ஆகி இருந்தது. அந்தச் சமயம், அந்த வியாபாரி அக்கடனை வசூல் செய்ய, என்னை யோசனை கேட்டார். நான் அவசரமாய், 'படிபோட்டு, வாரண்டு கொண்டுவா' என்று சொன்னேன். உடனே நிறைவேற்று விண்ணப்பம் போட்டு, அன்றே, வாரண்டு வந்தது. மறுநாள், பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக் கொண்டு' சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார். நான் அவர்களைக் கூட்டிக் கொண்டு, ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த 'எல்லைய்யர் சத்திரம்' என...

நானும் நெரிஞ்சிப் பேட்டை சாமியாரும்!

நானும் நெரிஞ்சிப் பேட்டை சாமியாரும்! Read more at:  http://tamil.oneindia.com/news/tamilnadu/thanthai-periyar-autobiography-263025.html தந்தை பெரியார் ஒரு தடவை, எங்கள் ஊருக்கு நெரிஞ்சிப் பேட்டை சாமியார் (சங்கராச்சாரி போன்றவர்) வந்தார். அது 1902-ம் வருஷமாய் இருக்கலாம்; அவருக்கு, எங்கள் ஊர் நகரத்துச் செட்டியார் வகுப்பு வியாபாரிகள் தடபுடலாய் பிக்ஷ (பிட்சை) நடத்துகிறார்கள். எங்கள் தகப்பனாரும் 50 ரூபா கொடுத்தார். பெரிய சமாராதனை நடக்கிறது. அந்தச் சாமியார் தம்பி ஒரு மைனர்; கடன்காரன்; அவனும் கூட வந்திருந்தான். அவன், ஈரோட்டில் ஒரு வியாபாரிக்குக் கடன் கொடுக்க வேண்டும்; அது கோர்ட்டில் டிக்ரி ஆகி இருந்தது. அந்தச் சமயம், அந்த வியாபாரி அக்கடனை வசூல் செய்ய, என்னை யோசனை கேட்டார். நான் அவசரமாய், 'படிபோட்டு, வாரண்டு கொண்டுவா' என்று சொன்னேன். உடனே நிறைவேற்று விண்ணப்பம் போட்டு, அன்றே, வாரண்டு வந்தது. மறுநாள், பகல் 12 மணிக்கு வாரண்டு எடுத்துக் கொண்டு' சேவகனுடன் அந்த வியாபாரி என்னிடம் வந்தார். நான் அவர்களைக் கூட்டிக் கொண்டு, ஈரோட்டில் சாமியார் இறங்கியிருந்த 'எல்லைய்யர் சத்திரம்' என...

கடவுள் ஒருவராம் - ஆனால் பிறப்பு நான்காம்! பிள்ளையார் பிறப்புப்பற்றி தந்தை பெரியார்

இந்து மதம் என்பதில் உள்ள கடவுள்களின் எண்ணிக்கை எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காத ு என்பது போல் எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டிருப்பதும் அத்தனை கடவுள்களுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை, பாட்டு முதலியவை ஏற்படுத்தி இருப் பவை அவை களுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக் கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான நேரங்களும், பல கோடி ரூபாய் பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாய்க்கொண்டே வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்கக் கூடிய காரியமல்ல. இக்கடவுள்களில் முதன்மை பெற்றதும் மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும் இந்துக்கள் என்ப வர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புக் கொண்டு வணங் கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது. இதனைக் கணபதி என்றும் விநாயகன் என்றும் விக்கினேஸ்வரன் என்றும் இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதுண்டு. நிற்க, இந்தப் பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தங்களுடைய எந்தக் காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும் கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக வணங் குவதுமாக இப்போது அமலில் இ...

சம்புகன் கதை என்ன ?

சம்புகனின் கதையை முழுமையாக அறியமுடியவில்லை . அதைச் சொல்லவமுடியுமா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார் . அந்தத் தேடலின் பதிவாக இதோ சம்புகனின் கதை  ஸ்ரீ வால்மீகி அருளிய இராமானணத்தில் உள்ளபடி . இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்து வந்தார். அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன். வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து நீர் யார்?என்ன நடந்தது ? என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார் . "ஸ்ரீ ராமா இதோ இந்த பாலகன் என் மகன் வீட்டின் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவன் திடுக்கென விழுந்து இறந்து விட்டான் . ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம் . எனவே என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு " என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர். மனம் கலங்கிப் போன ராமன் என் ஆட்சியில்...